May 9, 2026

யாழ். போதனா மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்று (09.05.2026) சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அவர்கள், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆளுநரை அழைத்துச் சென்று நிலைமைகளை நேரில் விளக்கினார். அதிகாலையில் ஏற்பட்ட இத்தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள், […]

யாழ். போதனா மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார். Read More »

அரச திணைக்களங்களில் தற்காலிக, அமைய, பதிலீட்டு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பில் இரு வார காலத்தினுள் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை

அரச திணைக்களங்களில் பல ஆண்டுகளாக தற்காலிக, அமைய (நாளாந்த), பதிலீட்டு, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையின் பேரில் பணியாற்றும் ஊழியர்களை அரச சேவைக்கு நிரந்தரமாக உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கத்தால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக, வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை இரு வார காலத்தினுள் துரிதமாக நிறைவு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள்

அரச திணைக்களங்களில் தற்காலிக, அமைய, பதிலீட்டு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை நிரந்தரமாக்குவது தொடர்பில் இரு வார காலத்தினுள் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை Read More »

Study In’ நிறுவனத்தின் புதிய கிளை யாழில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் ‘Study In’ நிறுவனத்தின் புதிய கிளை இன்று (08.05.2026) வெள்ளிக்கிழமை காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, நாடாவை வெட்டி நிறுவனத்தின் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார். நிகழ்வில் கௌரவ ஆளுநர் அவர்கள் ஆற்றிய வாழ்த்துரையில் குறிப்பிட்டதாவது: ‘எமது மாகாண மக்களைப் பொறுத்தவரையில் கல்விதான் மிகப்பெரிய மூலதனமாகும். கல்வியில் எப்போதும் உயர் நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே

Study In’ நிறுவனத்தின் புதிய கிளை யாழில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. Read More »