‘தற்போதைய புறச்சூழலைக் காரணம் காட்டி, எந்தவொரு திணைக்களமும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதை இடைநிறுத்தக் கூடாது’ – கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய நிதியொதுக்கீடுகளைக் கருத்திற் கொண்டு, மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை எவ்விதத் தொய்வுமின்றியும், தடங்கலின்றியும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தற்போதைய நெருக்கடியான புறச்சூழலில் மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதில் காணப்படுகின்ற சவால்கள் மற்றும் அதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20.03.2026) காலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் […]
