February 15, 2026

நிரல் அமைச்சுக்களின் மேற்பார்வைக் குழுக் கூட்டங்கள் ஊடாக மாகாணத்தின் கோரிக்கைகளை வென்றெடுக்கத் திட்டம்.

வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பௌதீக, மனிதவளத் தேவைப்பாடுகள் குறித்து, மத்திய அரசின் நிரல் அமைச்சுக்களின் துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் எடுத்துரைத்துத் தீர்வுகளைப் காண்பதற்கான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (14.02.2026) மாலை நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ம.ஜெகதீஸ்வரன் மற்றும் கௌரவ ஜெ.றஜீவன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கலந்துரையாடலில் கல்வி, […]

நிரல் அமைச்சுக்களின் மேற்பார்வைக் குழுக் கூட்டங்கள் ஊடாக மாகாணத்தின் கோரிக்கைகளை வென்றெடுக்கத் திட்டம். Read More »

“2026 ஆம் ஆண்டு ‘அபிவிருத்தி ஆண்டு’; துரித முடிவுகளும் அர்ப்பணிப்பான சேவையுமே அவசியம்!” – அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை

2026ஆம் ஆண்டு அபிவிருத்திக்குரிய ஆண்டு. எனவே, அதிகாரிகள் ‘அபிவிருத்தி நிர்வாகத்தை’ முன்னெடுக்கத் தயாராக வேண்டும். சாதாரண நிர்வாகத்தைப் போன்று அல்லாது, அபிவிருத்தி நிர்வாகத்தை முன்னெடுப்பதற்குத் துரித முடிவெடுக்கும் ஆற்றலும், வேலையின் மீதான அர்ப்பணிப்பும் மிக அவசியம். இந்தக் கொள்கையுடன் அனைவரும் எம்மோடு இணைந்து பயணிக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடனான விசேட கலந்துரையாடல், இன்று

“2026 ஆம் ஆண்டு ‘அபிவிருத்தி ஆண்டு’; துரித முடிவுகளும் அர்ப்பணிப்பான சேவையுமே அவசியம்!” – அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை Read More »