“திட்டத்தை ஆவணமாக முடக்காது, நடைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுங்கள்” – ஆளுநர் பணிப்புரை.
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் தயாரிக்கப்பட்ட ‘2026 – 2030 வடக்கு சுற்றுலா அபிவிருத்தி மூலோபாயத் திட்டம்’ இன்று வெள்ளிக்கிழமை (06.02.2026) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, திட்ட அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதோடு, அத்திட்டம் தொடர்பான விரிவான முன்னளிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், வவுனியாப் பல்கலைக்கழக வியாபாரக் […]
