“காலநிலைச் சவால்களை வென்று நிலைபேறான விவசாயத்தை நோக்கி!” – ஒட்டுசுட்டான் விவசாயக் கண்காட்சியை ஆளுநர் பார்வையிட்டார்
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில், ஒட்டுசுட்டான் விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான விவசாயக் கண்காட்சியை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (27.01.2026) மாலை நேரில் சென்று பார்வையிட்டார். ‘காலநிலைச் சவால்களை எதிர்கொண்டு நிலைபேறான விவசாயத்தை நோக்கி’ எனும் காலத்துக்கு ஏற்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கண்காட்சி, நேற்று (26.01.2026) திங்கட்கிழமை ஆரம்பமாகி, இன்றுடன் நிறைவுபெற்றது. கண்காட்சியைப் பார்வையிட்ட ஆளுநருக்கு, […]
