December 19, 2025

அரசின் நாட்டைக் கட்டியெழுப்பும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ் ஒரு மில்லியன் ரூபா பணத்தை வைப்பிலிட்டார்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் நாட்டைக் கட்டியெழுப்பும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ் அவர்கள் பணத்தை வைப்பிலிட்டு அதன் ஆவணத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை (19.12.2025) ஆளுநர் செயலகத்தில் வைத்துக் கையளித்தார். பேராசிரியர் சு.மோகனதாஸ் அவர்களின் சகோதரன் சு.கணேதாஸ் அவர்களால் ஒரு மில்லியன் ரூபா மேற்படி நிதியத்துக்கு வைப்புச் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆவணத்தை ஆளுநரிடம் கையளித்த நிலையில் ஜனாதிபதி செயலகத்துக்கு […]

அரசின் நாட்டைக் கட்டியெழுப்பும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ் ஒரு மில்லியன் ரூபா பணத்தை வைப்பிலிட்டார் Read More »

பேரிடர் வேளையில் சில சபைகள் நிபந்தனை விதித்து நிர்வாகச் சிக்கல்களைக் காரணம் காட்டியதை மன்னிக்க முடியாது. – ஆளுநர் நா.வேதநாயகன் உரை

மக்கள் உயிருக்குப் போராடும் இடர் வேளையில் எரிபொருள் மற்றும் நிதியைக் காரணம் காட்டி பணிகளைத் தாமதப்படுத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்றும், சபையில் தீர்மானங்களை நிறைவேற்றுவதன் ஊடாக சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை ஒருபோதும் சட்டபூர்வமாக்கிவிட முடியாது என்றும் வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ மேயர்கள் மற்றும் தவிசாளர்களுக்கான விசேட செயலமர்வு இன்று வெள்ளிக்கிழமை (19.12.2025) கைதடியிலுள்ள உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றபோதே, முதன்மை அதிதியாகக் கலந்துகொண்ட ஆளுநர்

பேரிடர் வேளையில் சில சபைகள் நிபந்தனை விதித்து நிர்வாகச் சிக்கல்களைக் காரணம் காட்டியதை மன்னிக்க முடியாது. – ஆளுநர் நா.வேதநாயகன் உரை Read More »

எல்லைப்புறக் கிராமங்கள் வரை அபிவிருத்தி எட்டப்பட வேண்டும்; உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரிப்பதே இலக்கு” – வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை

வடக்கு மாகாணத்தின் எல்லைப்புறங்கள் மற்றும் காடுகளால் சூழப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் என எவற்றையும் விடுத்துவிடாது, அனைத்துப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் முழுமையான திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாண விவசாயம், கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை ஆராயும் விசேட கூட்டம், இன்று வியாழக்கிழமை (18.12.2025) மாலை ஆளுநர்

எல்லைப்புறக் கிராமங்கள் வரை அபிவிருத்தி எட்டப்பட வேண்டும்; உற்பத்தியும் ஏற்றுமதியும் அதிகரிப்பதே இலக்கு” – வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை Read More »

மாணவர்கள், எதிர்மறை வட்டத்திலிருந்து வெளியேறி, நேரிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

எமது சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ‘எதையும் எதிர்க்கும்’ மனப்பாங்கில் மாற்றம் ஏற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதிகாரிகளிடம் காணப்படும் எதிர்மறையான போக்குகளும் இந்த சமூக மனோநிலையின் வெளிப்பாடே ஆகும். எனவே, எதிர்காலத்தில் உயர் பதவிகளை அலங்கரிக்கவுள்ள மாணவர்களாகிய நீங்கள், இந்த எதிர்மறை வட்டத்திலிருந்து வெளியேறி, நேரிய சிந்தனையுள்ளவர்களாக உங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியின் நிறுவுனர் தினமும், வருடாந்தப் பரிசளிப்பு விழாவும் இன்று

மாணவர்கள், எதிர்மறை வட்டத்திலிருந்து வெளியேறி, நேரிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். Read More »