December 18, 2025

முல்லைத்தீவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது

பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ரஹமா நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு பாலிநகர் மகாவித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை மாலை (17.12.2025) நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.  

முல்லைத்தீவில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது Read More »

அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் கிராமங்களில், மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட மக்கள் சந்திப்பு, ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட மக்கள் சந்திப்பு, வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (17.12.2025) புதன்கிழமை மாலை நடைபெற்றது. கோட்டைகட்டிய குளம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் சகிதம் ஆளுநர் ஒருவர் முதல் முறையாகத்

அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் கிராமங்களில், மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட மக்கள் சந்திப்பு, ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது Read More »

“பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னைய நிலையை விட மேலானதாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வேண்டுகோள்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களைத் துரிதமாக இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தது போலவே, எதிர்வரும் ஆண்டில் அவர்களை மீளக் கட்டியெழுப்புவதுடன், முன்னைய நிலையை விடவும் மிகச் சிறந்ததொரு வாழ்வியல் நிலைக்கு அவர்களை உயர்த்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை (17.12.2025) காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னைய நிலையை விட மேலானதாக மாற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வேண்டுகோள். Read More »