December 7, 2025

வடக்கு மாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடை விவரங்களைப் பதிவு செய்வதற்கும், அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான தொலைபேசி இலக்கங்கள்

வடக்கு மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்தச் சூழல் காரணமாகக் கால்நடைத் துறைக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாகப் பொதுமக்கள் தொடர்புகொள்வதற்கென மாவட்ட ரீதியான தொலைபேசி இலக்கங்களை வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் வெளியிட்டுள்ளார். கால்நடை வளர்ப்பாளர்கள் தமது அவசரத் தேவைகளுக்குப் பின்வரும் […]

வடக்கு மாகாணத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடை விவரங்களைப் பதிவு செய்வதற்கும், அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான தொலைபேசி இலக்கங்கள் Read More »

உலக வங்கியின் நிதியுதவியில் குளங்களைத் தூர்வாரும் செயற்பாடு அடுத்த ஆண்டு முன்னெடுக்கப்படும் போது வழுக்கையாற்றுப் படுக்கையிலுள்ள குளங்களும் தூர்வாரப்படும். – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன்

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும். WASPAR திட்டத்தின் ஊடாக இது தொடர்பில் முன்னெடுக்கப்படும் ஆய்வின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண நிர்வாகம் தனது ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் உறுதியளித்தார். வடக்கு மாகாணத்தில் ‘பங்கேற்புச் செயல் ஆய்வின் ஊடாக நீர் பாதுகாப்பு’ (WASPAR) திட்டத்தின் கீழ், வழுக்கையாறு தொடர்பான ஆய்வின் ஒரு பகுதியாக, உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட கலந்தாய்வு சுன்னாகத்திலுள்ள

உலக வங்கியின் நிதியுதவியில் குளங்களைத் தூர்வாரும் செயற்பாடு அடுத்த ஆண்டு முன்னெடுக்கப்படும் போது வழுக்கையாற்றுப் படுக்கையிலுள்ள குளங்களும் தூர்வாரப்படும். – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் Read More »

நாயாற்றுப் பாலம் ஊடான தொடர்பு துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொக்கிளாய் மக்களை ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் நேரடியாகச் சென்று சந்தித்தார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அண்மையில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைப் பார்வையிடுவதற்கும், ‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் கீழான நடமாடும் சேவையில் கலந்து கொள்வதற்கும் நேற்று வெள்ளிக்கிழமை (05.12.2025) முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் பயணம் மேற்கொண்டார். உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, தூய்மை இலங்கை செயலகம், மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், ‘தூய்மை இலங்கை – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு’ என்ற தேசிய திட்டத்துக்கு அமைய ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு

நாயாற்றுப் பாலம் ஊடான தொடர்பு துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொக்கிளாய் மக்களை ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் நேரடியாகச் சென்று சந்தித்தார். Read More »

கிராமிய அபிவிருத்தித் திணைக்களம் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அந்த இலக்கை இன்னமும் முழுமையாக அடையவில்லை – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார்

கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தை காலம் கடந்த அல்லது செயலிழந்த ஒரு திணைக்களமாகத் தொடர்ந்தும் அடையாளப்படுத்துவதைத் தவிர்த்து, அதனை மாற்றியமைக்கத் தூரநோக்குடன் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இம்முயற்சிகள் வெறும் ஆய்வுகளோடு நின்றுவிடாமல் செயல்வடிவம் பெற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ‘வடக்கு மாகாண கிராமிய வளர்ச்சியின் எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடலும், அது சார்ந்த ஆய்வின் வெளியீட்டு நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை (05.12.2025)

கிராமிய அபிவிருத்தித் திணைக்களம் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அந்த இலக்கை இன்னமும் முழுமையாக அடையவில்லை – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் தெரிவித்தார் Read More »