November 2025

இடர் காலத்தில் பிரதேச மற்றும் மாவட்டச் செயலகங்கள் 24 மணி நேரமும் மக்களுக்கு உதவும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் – கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினர்

எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள அரிதானதும், ஆபத்துமிக்கதுமான வளிமண்டலக் குழப்பம் காரணமாக வடக்கு மாகாணம் கடும் பாதிப்புக்களை எதிர்கொள்ளக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், இடர் பாதிப்புக்களைத் தணிப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பான அவசர முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று (24.11.2025) திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியற்றுறைத் தலைவர் பேராசிரியர் நா.பிரதீபராஜா, தற்போதைய வானிலைச் சூழல் […]

இடர் காலத்தில் பிரதேச மற்றும் மாவட்டச் செயலகங்கள் 24 மணி நேரமும் மக்களுக்கு உதவும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் – கௌரவ ஆளுநர் அறிவுறுத்தினர் Read More »

2026 இல் மத்திய அமைச்சுக்களின் நிதிகள் நேரடியாக மாகாண சபைக்கு விடுவிக்கப்படக்கூடிய சூழல் உள்ளதால், மக்களுக்குத் தேவையான திட்டங்களை முற்கூட்டியே தயாரிக்க வேண்டும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்

வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு துறைக்குமான ஒருங்கிணைந்த மற்றும் நீண்டகால நிலைத்திருப்புக்கான அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பான முன்னோடிக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று திங்கட்கிழமை (24.11.2025) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் உரையாற்றிய ஆளுநர் அவர்கள், ‘தேசிய திட்டமிடல் திணைக்களம், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மற்றும் தேசிய வரவு–செலவுத் திட்டத் திணைக்களம் ஆகியவற்றின் பணிப்பாளர் நாயகங்கள் அடுத்த மாதம் வடக்குக்கு வருகை தரவுள்ளனர். வெளிநாட்டு நிதி வழங்குனர்கள் நிதியை

2026 இல் மத்திய அமைச்சுக்களின் நிதிகள் நேரடியாக மாகாண சபைக்கு விடுவிக்கப்படக்கூடிய சூழல் உள்ளதால், மக்களுக்குத் தேவையான திட்டங்களை முற்கூட்டியே தயாரிக்க வேண்டும். – கௌரவ ஆளுநர் தெரிவித்தார் Read More »

வடக்கின் கோரிக்கைகளை அரசு சாதகமாகவே அணுகுகிறது; இந்த வாய்ப்பை விளையாட்டுத் துறை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” – ஆளுநர் நா.வேதநாயகன்

வடக்கின் அபிவிருத்தி சார்ந்து எம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளைத் தற்போதைய அரசாங்கம் மிகவும் சாதகமாகவே பரிசீலித்து வருகிறது. எனவே, இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி, விளையாட்டுத் துறைக்குத் தேவையான வளங்களைப் பெற்று, எமது வீரர்கள் சர்வதேச அரங்கில் மிளிர வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நடும் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை

வடக்கின் கோரிக்கைகளை அரசு சாதகமாகவே அணுகுகிறது; இந்த வாய்ப்பை விளையாட்டுத் துறை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” – ஆளுநர் நா.வேதநாயகன் Read More »

கண்டாவளையில் நீண்டகாலக் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு – ஆளுநர் தலைமையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் 17 முறைப்பாடுகள் தீர்த்து வைப்பு

கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருந்த காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் விசேட காணி நடமாடும் சேவையொன்று இன்று வெள்ளிக்கிழமை (21.11.2025) நடைபெற்றது. கண்டாவளைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரடியாகப் கலந்துகொண்டு பொதுமக்களின் காணிப் பிரச்சனைகளைக் கேட்டறிந்தார். இதன்போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 17 காணி தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில்

கண்டாவளையில் நீண்டகாலக் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு – ஆளுநர் தலைமையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் 17 முறைப்பாடுகள் தீர்த்து வைப்பு Read More »

வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க கனகராயன் ஆற்றுப் புனரமைப்பு – ஆளுநர் நா.வேதநாயகன் கள ஆய்வு

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் கனகராயன் ஆற்றுப் புனரமைப்புப் பணிகளை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று வெள்ளிக்கிழமை (21.11.2025) நேரில் சென்று பார்வையிட்டார். இரணைமடுக் குளம் வான்பாயும் காலங்களில் ஏற்படும் கடும் வெள்ளப்பெருக்கால், கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 3 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்வதும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைவதும்

வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க கனகராயன் ஆற்றுப் புனரமைப்பு – ஆளுநர் நா.வேதநாயகன் கள ஆய்வு Read More »

நிதியை விடுவிக்க அரசு தயார்; ஆனால் அதிகாரிகளே தடையாக உள்ளனர்” – அதிகாரிகளை நினைத்து வெட்கப்படுகிறேன் என ஆளுநர் நா.வேதநாயகன் கடும் சாடல்

மத்திய அரசாங்கம் நாங்கள் கோரும் நிதியை விடுவிப்பதற்குத் தயாராக உள்ளது. ஆனால், வடக்கு மாகாண நிர்வாகத்திலுள்ள ஒரு சில செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கு விருப்பமின்றி, வெறும் சலுகைகளை அனுபவிப்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். இத்தகைய அதிகாரிகளை நினைத்து நான் வெட்கப்படுகிறேன், என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கடும் விசனம் வெளியிட்டார். கிளிநொச்சி, புதுமுறிப்புக் கிராமத்தில் மக்கள் நலன்சார் பணிகளை ஆற்றிவரும் ‘பத்மலோக – மனிதவள சிறப்பாற்றல் நிறுவனத்தின்’ 10ஆவது ஆண்டு

நிதியை விடுவிக்க அரசு தயார்; ஆனால் அதிகாரிகளே தடையாக உள்ளனர்” – அதிகாரிகளை நினைத்து வெட்கப்படுகிறேன் என ஆளுநர் நா.வேதநாயகன் கடும் சாடல் Read More »

மகளிர் விவகார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (20.11.2025) நடைபெற்றது. மகளிர் விவகார அமைச்சு, கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், சமூகசேவைகள் திணைக்களம், தொழிற்றுறை

மகளிர் விவகார அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

“சுற்றுலாத்துறை வளர்ச்சியே வடக்கின் தன்னிறைவுக்கு வழி” – இரு முக்கிய நூல்களை வெளியிட்டு ஆளுநர் நா.வேதநாயகன் உரை

சுற்றுலாத்துறையைத் முறையாக அபிவிருத்தி செய்வதன் மூலம் வடக்கு மக்கள் பொருளாதார ரீதியில் தங்கள் சொந்தக் காலிலேயே உறுதியாக நிற்கும் நிலையை உருவாக்க முடியும். இதற்கான முழுமையான ஒத்துழைப்புக்களை வடக்கு மாகாண நிர்வாகம் வழங்கும். அதேவேளை, இத்துறையின் வளர்ச்சிக்குத் தனியார்த் துறையின் பங்களிப்பும் இன்றியமையாதது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தினால் உருவாக்கப்பட்ட ‘சக்தி அம்மன் வழித்தடங்கள்’ (Goddess Shakthi Trail) மற்றும் ‘சுற்றுலாப் பயண ஒழுங்கு’ (Tourism Itineraries) ஆகிய

“சுற்றுலாத்துறை வளர்ச்சியே வடக்கின் தன்னிறைவுக்கு வழி” – இரு முக்கிய நூல்களை வெளியிட்டு ஆளுநர் நா.வேதநாயகன் உரை Read More »

“விவசாயிகளைத் தொழில்முனைவோராக மாற்றுவதே எமது இலக்கு” – வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதி

பண்ணைகளில் வெறும் கூலித் தொழிலாளிகளாக இல்லாமல், விவசாயிகளைச் சிறந்த பண்ணையாளர்களாகவும் தொழில்முனைவோராகவும் மாற்றுவதே எங்களின் பிரதான இலக்காகும். வடக்கு மக்கள் எத்தகைய நெருக்கடியிலும் தன்னிறைவான வாழ்க்கை வாழ்வதற்குத் துணைநிற்கும் விவசாயிகளை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் மற்றும் நன்னீர் மீன்பிடிச் சங்கங்களுக்கான கௌரவிப்பு

“விவசாயிகளைத் தொழில்முனைவோராக மாற்றுவதே எமது இலக்கு” – வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதி Read More »

மறைந்த தென்மாகாண கௌரவ ஆளுநருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நேரில் சென்று இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்.

தென்மாகாண கௌரவ ஆளுநர் பந்துல ஹரிசந்திர அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரின் பூதவுடல் காலியில் அமைந்துள்ள மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (18.11.2025) அங்கு நேரில் சென்று இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்.

மறைந்த தென்மாகாண கௌரவ ஆளுநருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நேரில் சென்று இறுதி அஞ்சலியைச் செலுத்தினார். Read More »