November 26, 2025

காணி மோசடிகள், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பொலிஸார் கூடுதல் அக்கறையுடன் செயற்பட வேண்டும் – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் காணி மோசடிகள், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பொலிஸார் கூடுதல் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநருக்கும், மாகாணத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் புத்திக சிறிவர்தன அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (25.11.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் […]

காணி மோசடிகள், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் போதைப்பொருள் பாவனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பொலிஸார் கூடுதல் அக்கறையுடன் செயற்பட வேண்டும் – ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் வலியுறுத்தினார். Read More »

வவுனியா மற்றும் யாழ்ப்பாண நகரங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல், ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

இலங்கையில் 10 முக்கிய நகரங்களை அபிவிருத்தி செய்யும் விசேட திட்டத்தின்கீழ் உள்வாங்கப்பட்டுள்ள வவுனியா மற்றும் யாழ்ப்பாண நகரங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25.11.2025) நடைபெற்றது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரச திணைக்களங்கள் ஆகியனவற்றின் முழுமையான இணக்கப்பாட்டுடனேயே இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என இதன்போது குறிப்பிட்டார். வவுனியா மாவட்டத்துக்காக நகர அபிவிருத்தி

வவுனியா மற்றும் யாழ்ப்பாண நகரங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல், ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. Read More »

வடக்கு சுற்றுலாத்துறையின் வெற்றிக்கு உள்கட்டமைப்பு மற்றும் மனிதவள மேம்பாடு அவசியம் – ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்து

யாழ்ப்பாணம் மற்றும் ஒட்டுமொத்த வடக்கு மாகாணமும் இன்று ஒரு புதிய மாற்றத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும், சுற்றுலாத்துறை குறித்தும், குறிப்பாக உள்வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான சேவைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் நாம் முழுமையான வெற்றியடைவதற்குச் சில சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கைக்கு உள்வரும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சங்கம் (SLAITO) வடக்குப் பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்றை யாழ்ப்பாணம் ஜெட்விங் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை (25.11.2025) நடத்தியது.

வடக்கு சுற்றுலாத்துறையின் வெற்றிக்கு உள்கட்டமைப்பு மற்றும் மனிதவள மேம்பாடு அவசியம் – ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்து Read More »