November 13, 2025

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் பிரதேசங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டியது அவசியமாகும் – கௌரவ ஆளுநர்

உள்ளூராட்சி மன்றங்கள் சேவைகளை வழங்குவதற்கும் மேலாக தங்களது வருமானங்களையும் அதிகரிக்க வேண்டும். அதற்குத் தேவையான திட்டங்களை உருவாக்கி, உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகில் இன்று வியாழக்கிழமை (13.11.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் […]

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் பிரதேசங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டியது அவசியமாகும் – கௌரவ ஆளுநர் Read More »

இலங்கைக்கு சுற்றுலா வந்த சென்னை லயோலா கல்லூரியில் பட்டப் பின் படிப்பை (Postgraduate Studies) மேற்கொண்டு வரும் மாணவர்கள் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்

சென்னை லயோலா கல்லூரியில் பட்டப் பின் படிப்பை (Postgraduate Studies) மேற்கொண்டு வரும் மாணவர்கள், தமது கல்வி நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கைக்கு 10 நாள் கல்விச் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளனர். அவர்கள் இன்று புதன்கிழமை (12.11.2025) யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வருகை தந்து, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை தந்தை செல்வா கலையரங்கில் சந்தித்துக் கலந்துரையாடினர். போருக்குப் பின்னரான சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக நிலைமைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்தப் பயணம்

இலங்கைக்கு சுற்றுலா வந்த சென்னை லயோலா கல்லூரியில் பட்டப் பின் படிப்பை (Postgraduate Studies) மேற்கொண்டு வரும் மாணவர்கள் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர் Read More »

சுற்றுலாப் பணியகத்தினருடனான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

2026ஆம் ஆண்டில் சுற்றுலாச் செல்வதற்கான உலகின் மிகச் சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு வரும் சுற்றுலாவிகள் எந்த எதிர்பார்ப்புடன் வருகிறார்களோ, அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து திருப்தியுடன் திரும்பிச் செல்லும் வகையில் எமது சுற்றுலாத்துறை சார்ந்த சேவைகள் வழங்கப்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தினருடனான மாதாந்த கலந்துரையாடல் இன்று (12.11.2025) புதன்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக்

சுற்றுலாப் பணியகத்தினருடனான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »