November 7, 2025

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் இன்று வியாழக்கிழமை (06.11.2025) மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனின் வரவேற்புரையுடன் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆரம்பமானது. தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் ஆரம்ப உரை இடம்பெற்றது. அதன் பின்னர் இணைத்தலைவர் உரையாற்றிய ஆளுநர், ஆண்டு நிறைவடைவதற்கு இன்னமும் ஆறு வாரங்கள் […]

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது. Read More »

எங்கள் எதிர்காலச் சந்ததியை வளர்த்தெடுக்கும் நிறுவனங்கள்தான் பாடசாலைகள். மாணவர்களுக்கு நாங்கள் கல்விக்கு மேலதிகமாக தலைமைத்துவப்பண்பையும் வளர்த்துவிட வேண்டும். – கௌரவ ஆளுநர்

மாணவர்களிடத்தில் கல்வியிலும் இணைபாடவிதானச் செயற்பாடுகளிலும் போட்டி தேவை. ஆனால் பொறாமை இருக்கக் கூடாது. நாங்களும் நன்றாக வரவேண்டும். மற்றவர்களும் நன்றாக வரவேண்டும். அப்போதுதான் எமது சமூகம் வளர்ச்சியடையும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுரை வழங்கினார். கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் பி.ரவீந்திரநாதன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை (06.11.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், மாணவர்களுக்கான

எங்கள் எதிர்காலச் சந்ததியை வளர்த்தெடுக்கும் நிறுவனங்கள்தான் பாடசாலைகள். மாணவர்களுக்கு நாங்கள் கல்விக்கு மேலதிகமாக தலைமைத்துவப்பண்பையும் வளர்த்துவிட வேண்டும். – கௌரவ ஆளுநர் Read More »

தற்போது ஒரு சிலர் மாத்திரமே எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் செயற்படுகின்றனர் – கௌரவ ஆளுநர்

கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லாமல் இருக்கின்றது. சமூகத்தின் மீதான அக்கறை என்பதும் குறைந்து செல்கின்றது. ஒரு சிலர் மாத்திரமே எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் – அக்கறையுடன் செயற்படுகின்றனர் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சுவிற்சர்லாந்து உறவுகளும் நித்திலம் கலையகமும் இணைந்து நடத்திய கலைஞர் மதிப்பளிப்பு மற்றும் திரையிசை வெளியீடு என்பன முகமாலை சிவபுர வளாகத்தில் நேற்று புதன்கிழமை மாலை (05.11.2025) மூத்த சட்டத்தரணி சோமசுந்தரம் தேவராஜா தலைமையில்

தற்போது ஒரு சிலர் மாத்திரமே எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடனும் அக்கறையுடனும் செயற்படுகின்றனர் – கௌரவ ஆளுநர் Read More »

யாழ். வர்த்தக சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் கௌரவ ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது

2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த இடமாக யாழ்ப்பாணம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண நகரை அழகுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு யாழ்ப்பாண வர்த்தக சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுடனான சந்திப்பின்போது உறுதியளிக்கப்பட்டது. வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (04.11.2025) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் வர்த்தக சங்கத்தால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டு அவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. யாழ்ப்பாணம்

யாழ். வர்த்தக சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் கௌரவ ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது Read More »