October 2025

நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையம் அமைக்கப்படும் பகுதியை கௌரவ ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அரியாலை காரைமுனங்கு பிரதேசத்தில் நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கு மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதியை ஆளுநர் இன்று வெள்ளிக்கிழமை காலை (17.10.2025) நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் தரம்பிரிப்பு நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் அங்கு முன்னெடுக்கப்படவுள்ள பணிகள் தொடர்பிலும் நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் ஆளுநருக்கு எடுத்துக்கூறினார். தரம் பிரிக்கும் நடவடிக்கையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 17பேர் ஈடுபட்டுள்ள […]

நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையம் அமைக்கப்படும் பகுதியை கௌரவ ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டார். Read More »

உலக வங்கியின் நிதியுதவியில் யாழ்ப்பாணக் கோட்டையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

உலக வங்கியின் நிதியுதவியில் யாழ்ப்பாணக் கோட்டையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (17.10.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், கோட்டையின் அபிவிருத்தியின் தேவைப்பாடு தொடர்பில் வலியுறுத்தினார். நகர அபிவிருத்தி அதிகார சபையால் கோட்டையின் அபிவிருத்தி தொடர்பில் தயாரிக்கப்பட்ட திட்டமுன்மொழிவும் முன்வைக்கப்பட்டது. திட்டத்தை தொடங்குவதற்கான தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு புத்தசாசன சமய கலாசார அமைச்சர்

உலக வங்கியின் நிதியுதவியில் யாழ்ப்பாணக் கோட்டையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான அனைத்து உறுப்பினர்களுக்கும், கௌரவ ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

மாந்தை கிழக்கு பிரதேசத்தில் புனரமைக்கப்பட வேண்டிய வீதிகளின் பட்டியலை முன்னுரிமைப்படுத்துமாறும் கிடைக்கப்பெறுகின்ற நிதிகளுக்கு ஏற்ப அவற்றை படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் புனரமைக்கலாம் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி இராசையா நளினி தலைமையிலான பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (17.10.2025) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின்

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான அனைத்து உறுப்பினர்களுக்கும், கௌரவ ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றச் சபை, மேன்முறையீட்டுச் சபை ஆகியனவற்றில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளரால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றச் சபை மற்றும் மேன்முறையீட்டுச் சபை ஆகியனவற்றில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் குழப்பகரமான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், இரு சபைகளிலும் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் அவர்களிடம் அறிக்கை கோரப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக அவரால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை, தெளிவுபடுத்தல்களுக்காக ஊடகங்களுக்கு வழங்கப்படுகின்றது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு மாகாண வருடாந்த ஆசிரிய இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றச் சபை, மேன்முறையீட்டுச் சபை ஆகியனவற்றில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளரால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை Read More »

ஒவ்வொரு மனிதனும் விரும்புவது ஆரோக்கியத்தையும், அமைதியையும் சந்தோசத்தையும்தான். தியானம் என்ற தன்மை எமக்குள் வந்துவிட்டால் அமைதியும் சந்தோசமும் இயல்பானதாகிவிடும். – கௌரவ ஆளுநர்

இன்றைய நாட்டுச் சூழல் அமைப்பில் வாழும் மக்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்கப் பெற்றிருந்தாலும், அவர்களைச் சூழ்ந்திருக்கும் துன்பத்தை போக்குவதற்கும் அதிலிருந்து விடுதலை பெறுவதற்கும் தியானப்பயிற்சிகள் மற்றும் மன வளக்கலை யோகாப் பயிற்சிகள் தேவையாக இருக்கின்றன. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார். பிறவுண் வீதியில் அமைந்துள்ள அறிவுத்திருக்கோயிலின் ஒன்பதாம் அகவை நாளை முன்னிட்டு அங்கு நேற்று புதன்கிழமை மாலை (15.10.2025) நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேலும் கூறியதாவது,

ஒவ்வொரு மனிதனும் விரும்புவது ஆரோக்கியத்தையும், அமைதியையும் சந்தோசத்தையும்தான். தியானம் என்ற தன்மை எமக்குள் வந்துவிட்டால் அமைதியும் சந்தோசமும் இயல்பானதாகிவிடும். – கௌரவ ஆளுநர் Read More »

சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் செயல்படும் மாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் கவனிப்புச் சேவைகள் திணைக்களத்திற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆறு (06) நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மற்றும் ஒரு (01) முன்பள்ளி ஆசிரியர் ஆகியோருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் திகதியன்று அமைச்சில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திருமதி ஜெயராணி பரமோதயன் அவர்கள் நியமனக் கடிதங்களை வழங்கி வைக்க இருந்தார். நிகழ்வில் அமைச்சின் உயர் அதிகாரிகள்

சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன Read More »

மாகாண கல்விப் பணிப்பாளர் தலைமையிலான குழுவால் ஒவ்வொரு மேன்முறையீடும் உரிய முறையில் தனித்தனியாக ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட்ட, 2026ஆம் ஆண்டுக்கான சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றப்பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதும் எந்தவொரு ஆசிரியரும் மேன்முறையீடு மேற்கொள்ள முடியும் எனவும், மேன்முறையீடு எதிர்வரும் 22ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஆசிரியர்களின் நலன்கருதி எதிர்வரும் 27ஆம் திகதி (27.10.2025) வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவித்துள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்,

மாகாண கல்விப் பணிப்பாளர் தலைமையிலான குழுவால் ஒவ்வொரு மேன்முறையீடும் உரிய முறையில் தனித்தனியாக ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் – கௌரவ ஆளுநர் Read More »

விவசாய அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14.10.2025) நடைபெற்றது. விவசாய அமைச்சு, விவசாயத் திணைக்களம், கால்நடை அபிவிருத்தித் திணைக்களம், நீர்பாசனத் திணைக்களம் என ஒவ்வொரு திணைக்களத்தினதும் முன்னேற்றங்கள் தனித்தனியாகவும்

விவசாய அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

யாழ்ப்பாண நகரம் நெரிசல் மிக்கதாகவும் நெருக்கடி மிக்கதாகவும் மாறியுள்ளது. அவற்றை ஒழுங்கமைக்க – சீரமைக்க வேண்டியதேவை, பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அதற்கு அமைவாக நெடுந்தூர, குறுந்தூர பேருந்துச் சேவைகள் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படவேண்டியுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14.10.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன்,

யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

நாங்கள் தாய் மொழிக்கு மேலதிகமாக சிங்களம் மற்றும் ஆங்கிலத்தை கற்றிருப்பது எங்களுக்கு எப்போதுமே கைகொடுக்கும். – கௌரவ ஆளுநர்

நாம் இன்னொரு மொழியைக் கற்பதன் ஊடாக எமது சேவையை வினைத்திறனாக்குவதுடன் மாத்திரமல்லாது தொடர்பாடல் இடைவெளியையும் குறைத்துக்கொள்ள முடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், வடக்கு மாகாண சபையுடன் இணைந்து மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கு நடத்திய சிங்கள டிப்ளோமா கற்கை நெறியின் பட்டமளிப்பு விழா வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை காலை (13.10.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில்

நாங்கள் தாய் மொழிக்கு மேலதிகமாக சிங்களம் மற்றும் ஆங்கிலத்தை கற்றிருப்பது எங்களுக்கு எப்போதுமே கைகொடுக்கும். – கௌரவ ஆளுநர் Read More »