October 12, 2025

இலங்கை விவசாயிகள் தொழில்முனைவோர் அமையத்தின் பிரதிநிதிகளுக்கும், கௌரவ ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுரண்டலற்ற முறையில் விவசாயிகள் தங்களுடைய உற்பத்திகளுக்கு நியாய விலை கிடைப்பதற்கு வழியேற்படுத்துவதும் நோக்கில் இலங்கை விவசாயிகள் தொழில்முனைவோர் அமையம் யாழ். மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களை எதிர்வரும் நவம்பர் மாதம் நிறுவுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை விவசாயிகள் தொழில்முனைவோர் அமையத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (09.10.2025) நடைபெற்றது. “GoVimart” என்னும் ஒன்றிணைந்த அணுகுமுறையூடாக, விவசாய உற்பத்திகளுக்கு நிலைபேறான தீர்வை […]

இலங்கை விவசாயிகள் தொழில்முனைவோர் அமையத்தின் பிரதிநிதிகளுக்கும், கௌரவ ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

சங்கிலியன் பூங்கா, இணுவில் சிறுவர் மருத்துவமனைக்கான காணிகளை ஒழுங்குமுறைப்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.

சங்கிலியன் பூங்கா மற்றும் இணுவிலில் சிறுவர் மருத்துவமனைக்காக அடையாளப்படுத்தப்பட்ட காணிகளை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை மாலை (11.10.2025) நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், பிரதி நில அளவையாளர் நாயகம், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் – காணி, நல்லூர் பிரதேச செயலர், உடுவில் உதவிப் பிரதேச செயலர், யாழ்.

சங்கிலியன் பூங்கா, இணுவில் சிறுவர் மருத்துவமனைக்கான காணிகளை ஒழுங்குமுறைப்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »