July 26, 2025

அடுத்த 5 ஆண்டுகளில், வடக்கு மாகாணம் நெறிமுறைசார்ந்த கடலட்டை வளர்ப்பில் உலகளாவிய முதன்மையிடத்துக்கு வரும் என நம்புகிறேன் – கௌரவ ஆளுநர்

கடலட்டை உற்பத்தியை அதிகரிப்பதை மாத்திரம் நாம் இலக்காகக் கொண்டு செயற்பட்டாலோ அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளை அனுமதித்தாலோ கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் நுட்பமான சமநிலையை சீர்குலையும். நாம் எமது சுற்றுச்சூழல் நிலைத்து நீடித்து நிற்கக்கூடிய வகையில் செயலாற்றவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். சினமன்குளோபல் நிறுவனமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய கடலட்டை உற்பத்தி தொடர்பான கருத்தரங்கு ‘நோர்த் ஹேட் ஹொட்டலில்’ இன்று சனிக்கிழமை காலை (26.07.2025) நடைபெற்றது. இங்கு தொடக்கவுரையாற்றிய ஆளுநர், […]

அடுத்த 5 ஆண்டுகளில், வடக்கு மாகாணம் நெறிமுறைசார்ந்த கடலட்டை வளர்ப்பில் உலகளாவிய முதன்மையிடத்துக்கு வரும் என நம்புகிறேன் – கௌரவ ஆளுநர் Read More »

UNDP ஆல் நடத்தப்படும் வடக்கு மாகாண சுற்றுலாத் தேவைகளின் மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தால் (UNDP) நடத்தப்படும் வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் தேவைகள் மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (25.07.2025) நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணம் சுற்றுலாத்துறைக்கு பொருத்தமான இடம். பல முதலீட்டாளர்கள் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்காக வருகின்றனர். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக உலக வங்கி உட்கட்டுமான அபிவிருத்திகளுக்கு எங்களுக்கு உதவ இருக்கின்றது. வெளிவிவகார வளத்திணைக்களம்

UNDP ஆல் நடத்தப்படும் வடக்கு மாகாண சுற்றுலாத் தேவைகளின் மதிப்பீடு தொடர்பான கலந்துரையாடல் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படும் திகதி பிற்போடப்பட்டது

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள், நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்தும், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் உள்ளூர் சேவைகள் தற்போது இலங்கை போக்குவரத்துச் சபை செயற்படும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும் மேற்கொள்வது என்று, எடுக்கப்பட்ட முடிவு நடைமுறைப்படுத்தப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படும் திகதி பிற்போடப்பட்டது Read More »