July 20, 2025

பிரபல சைக்கிளோட்ட வீரர் அமரர் அகஸ்ரின் ஞாபகார்த்த மாபெரும் சைக்கிளோட்டப் போட்டி – 2025 இன் பரிசளிப்பு நிகழ்வு

இன்றைய காலத்தில் தங்கள் தேவைக்கு துவிச்சக்கரவண்டியைப் பயன்படுத்துபவர்களைவிட தேகாரோக்கியத்துக்காக பயன்படுத்துபவர்களே அதிகம். இன்றைய இளைய சமூகத்திடம் துவிச்சக்கரவண்டிப் பாவனையை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். பிரபல சைக்கிளோட்ட வீரர் அமரர் அகஸ்ரின் ஞாபகார்த்த மாபெரும் சைக்கிளோட்டப் போட்டி – 2025 இன் பரிசளிப்பு நிகழ்வு, சிரேஷ்ட வெளிநாட்டுச்சேவை உத்தியோகத்தர் அகஸ்ரின் கிறிஸ்ரிரூபன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை (19.07.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் […]

பிரபல சைக்கிளோட்ட வீரர் அமரர் அகஸ்ரின் ஞாபகார்த்த மாபெரும் சைக்கிளோட்டப் போட்டி – 2025 இன் பரிசளிப்பு நிகழ்வு Read More »

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவறம் பூண்ட நூற்றாண்டு விழா

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவறம் பூண்ட நூற்றாண்டு விழா நிகழ்வுகள் புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ். மாவட்டச் செயலகம், யாழ்ப்பாண பிரதேச செயலகம், அகில இலங்கை இந்துமா மன்றம் மற்றும் யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து மானிப்பாயில் விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது மகா சமாதி தினமான இன்று சனிக்கிழமை (19.07.2025) நடத்தின. மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்று

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவறம் பூண்ட நூற்றாண்டு விழா Read More »

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் சந்தித்துக் கலந்துரையாடினார்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வேலாயுதம் கரிகாலன், ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18.07.2025) சந்தித்துக் கலந்துரையாடினார். புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் மனுக் கையளித்ததுடன், சபையில் வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமை தொடர்பிலும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினார். இயலுமான வரையில் சபைக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக ஆளுநர் இதன்போது பதிலளித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களை, புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் சந்தித்துக் கலந்துரையாடினார் Read More »