February 2025

தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், காணியின் உரிமையாளர்களுடன் சந்திப்பு நடத்தியிருந்தார்.

இந்தச் சந்திப்பின்போது விகாரை தற்போது அமைந்துள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது என்றும் அது தொடர்பான ஆவணங்களையும் அவர்கள் இதன்போது சமர்ப்பித்திருந்தனர். திஸ்ஸவிகாரைக்குரிய காணி பிறிதொரு இடத்தில் அமைந்துள்ளது என்பதையும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். விகாரை தற்போது அமைந்துள்ள காணிக்கு மேலதிகமாகவும் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த காணி உரிமையாளர்கள் அந்தக் காணியை விடுவித்துத் தருவதுடன், விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்கவேண்டும் எனக் கோரியிருந்தனர். காணி உரிமையாளர்களது கோரிக்கைக்கு அமைவாக இது தொடர்பில் விகாராதிபதியுடனும், நயினாதீவு […]

தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், காணியின் உரிமையாளர்களுடன் சந்திப்பு நடத்தியிருந்தார். Read More »

அமரத்துவமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சோ.சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

காங்கேசந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்கு (01.02.2025) பிற்பகல் சென்று அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஆளுநர், அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் அனுதாபங்களைக் கூறினார்.  

அமரத்துவமடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சோ.சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார். Read More »

‘தூய்மையான இலங்கை’ செயற்றிட்டத்தின் வடக்கு மாகாணத்துக்கான அறிமுக நிகழ்வு நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.

கௌரவ ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ‘தூய்மையான இலங்கை’ செயற்றிட்டத்தின் வடக்கு மாகாணத்துக்கான அறிமுக நிகழ்வு நாளை மறுதினம் திங்கட்கிழமை (03.02.2025) யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட திருநகர் வட்டாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (01.02.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம

‘தூய்மையான இலங்கை’ செயற்றிட்டத்தின் வடக்கு மாகாணத்துக்கான அறிமுக நிகழ்வு நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது. Read More »

வடக்கு மாகாணத்தில் 01.02.2025 முதல், நீண்டதூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பயணிகளுக்கு பிரயாணசிட்டை வழங்கப்படவேண்டும்

அதேபோன்று உள்ளூர் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் 01.03.2025 ஆம் திகதிக்கு முன்னர் பயணச்சிட்டைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.மகேஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் திடீர் பரிசோதக உத்தியோகத்தர்கள் ஊடாக சோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் தாங்கள் செலுத்தும் கட்டணங்களின் மீதிப்பணம் தரப்படுவதில்லை எனவும், கூடுதலான கட்டணம் அறவிடப்படுவதாகவும்

வடக்கு மாகாணத்தில் 01.02.2025 முதல், நீண்டதூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பயணிகளுக்கு பிரயாணசிட்டை வழங்கப்படவேண்டும் Read More »