February 2025

கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் இணைந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் சனிக்கிழமை (15.02.2025) பங்கேற்றார்

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு வருகை தந்த பிரதமரை ஆளுநர் அவர்கள் வரவேற்றார். தொடர்ந்து அங்கு ஆசிரிய மாணவர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆளுநர் பங்கேற்றதுடன், தேசிய கல்வியற் கல்லூரி சமூகத்தால் ஆளுநர் மதிப்பளிக்கப்பட்டிருந்தார். தேசிய கல்வியற் கல்லூரியில், வடக்கு மாகாண கல்வித்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் அவர்கள் பங்கேற்றதுடன், ஆளுநர் மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் […]

கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் இணைந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் சனிக்கிழமை (15.02.2025) பங்கேற்றார் Read More »

பெண் தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் செயற்பாடுகளை வரவேற்பதோடு கனேடிய அரசாங்கத்திடமிருந்தும் இன்னமும் உதவிகளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களை வலுப்படுத்தும், ‘எம்பவர் பெண்கள்’ நிகழ்வு யாழ்ப்பாணம் நகரிலுள்ள ஹர்ர நஷனல் வங்கியின் தலைமைக் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை காலை (14.02.2025) இடம்பெற்றது. இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷும் இதில் பங்கேற்றார். இங்கு உரையாற்றிய ஆளுநர், கனேடிய அரசாங்கம் வூசூ அமைப்பின் ஊடாக கடந்த காலத்தில் குறிப்பாக இறுதிக்கட்டப்போர் ஆரம்பித்த தருணங்களில் எமது மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தது. வடக்கிலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முன்கொண்டு செல்வதில்

பெண் தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டும் செயற்பாடுகளை வரவேற்பதோடு கனேடிய அரசாங்கத்திடமிருந்தும் இன்னமும் உதவிகளை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். Read More »

மாற்றத்துக்கு எல்லோரும் தயாராகவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

கடந்த காலங்களில் தவறாக ஒரு விடயம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதையே தொடர்வதற்குத்தான் பலர் விரும்புகின்றார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு யாரும் தயாராக இல்லை. தவறானது என்று தெரிந்தால் அதை முடிவுக்கு கொண்டு வந்து சரியானதைச் செய்யவேண்டும். இந்த மாற்றத்துக்கு எல்லோரும் தயாராகவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், ஒவ்வொரு மாவட்டங்களினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், வடக்கிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள்

மாற்றத்துக்கு எல்லோரும் தயாராகவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக இலங்கைக்கான கனேடியத் தூதுவருக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் எடுத்துரைத்தார்.

வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை (14.02.2025) சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்போது, வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆளுநர் விரிவாகக் குறிப்பிட்டார். வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன காணிகளை வர்த்தமானியில் பிரசுரித்த முறைமை தவறானது என்றும் அதனால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பிலும் ஆளுநர் குறிப்பிட்டார். இடம்பெயர்ந்த மக்கள் தங்களது சொந்தக் காணிகளையே விடுவிக்குமாறு கோருகின்றனர் என்றும்,

வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக இலங்கைக்கான கனேடியத் தூதுவருக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் எடுத்துரைத்தார். Read More »

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டைக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் அதைப்பயன்படுத்தி எமது மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்துகொள்ளவேண்டும்.

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டைக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் அதைப்பயன்படுத்தி எமது மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்துகொள்ளவேண்டும். இதைப்போன்றதொரு சந்தர்ப்பத்தை நாம் இழக்கக் கூடாது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் நோய்தடுப்பு பராமரிப்பு சேவைப் பிரிவுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (14.02.2025) இடம்பெற்றது. அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட பாலம் நிறுவனத்தின் நிதி உதவியில் வன்னி

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சாதகமான நிலைப்பாட்டைக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் அதைப்பயன்படுத்தி எமது மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்துகொள்ளவேண்டும். Read More »

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (13.02.2025) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் ஆசிரியர் சேவைச் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், கௌரவ பிரதியமைச்சருமான பிரதீப் சுந்தரலிங்கம், ஆசிரியர் சேவைச் சங்கத்தின் உபதலைவரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகதீஸ்வரன் ஆகியோரும், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் க.பிரட்லி ஜெனட்,

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் Read More »

கிடைக்கின்ற உதவிகள் – நிவாரணங்களைப் பயன்படுத்தி மக்கள் தங்களின் வாழ்க்கையை நிலைபேறானதாக மாற்றியமைக்க வேண்டும். – ஆளுநர்

வாழ்வாதார மேம்பாட்டுக்காகத்தான் உதவிகள் – நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன. அதைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் தொடர்ந்தும் அவை கிடைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது தவறு. கிடைக்கின்ற உதவிகள் – நிவாரணங்களைப் பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையை நிலைபேறாணதாக மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். உலக உணவுத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் திட்டத்தின் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டத்துக்கான மீளாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (13.02.2025) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. கிராமிய

கிடைக்கின்ற உதவிகள் – நிவாரணங்களைப் பயன்படுத்தி மக்கள் தங்களின் வாழ்க்கையை நிலைபேறானதாக மாற்றியமைக்க வேண்டும். – ஆளுநர் Read More »

நெற்செய்கையில் புரட்சியை ஏற்படுத்துவது தொடர்பான வயல் விழா நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட விவசாய திணைக்களத்தின் கீழ் உள்ள வன்னேரிக்குளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் புதிய தொழில்நுட்ப முறையிலான நெல் செய்கை தொடர்பான வயல் விழா நிகழ்வானது 31.01.2025 அன்று காலை 11.00 மணியளவில் பெரிய நீர்ப்பாசனக்குளமான வன்னேரிக்குளத்தின் கீழ் ம.தவக்குமார் என்பவரின் வயலில் விவசாயப் போதனாசிரியர் திரு.சி.டிறியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் வயல் விழா நிகழ்வில் புதிய தொழில்நுட்ப முறைகளான வரிசையில் விதைகள் இடல் இயந்திர நாற்று நடுகை மற்றும் வழமையான சேற்று விதைப்பு தொழில்நுட்பங்களை

நெற்செய்கையில் புரட்சியை ஏற்படுத்துவது தொடர்பான வயல் விழா நிகழ்வு Read More »

எமது சமூகத்தின் மாற்றத்துக்கான விதையை முன்பள்ளி குழந்தைகளிடமே விதைக்கவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

எமது சமூகத்தின் மாற்றத்துக்கான விதையை முன்பள்ளி குழந்தைகளிடமே விதைக்கவேண்டும். அவர்களுக்கு ஒழுக்க விழுமியங்களைக்கற்றுக்கொடுக்க வேண்டும். எதிர்காலத்திலாவது எமது சமூகம் முன்னர் எவ்வாறு கட்டுக்கோப்புடன் வாழ்ந்ததோ அதேபோன்றதொரு நிலைமை உருவாக இப்போதே அடித்தளம் அமைக்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தெல்லிப்பழை மழலைகள் பூங்காவின் ‘மலரும் மழலைகள்’ நூல் வெளியீட்டு நிகழ்வு பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய திருமணமண்டபத்தில் இன்று புதன்கிழமை மாலை (12.02.2025) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று நூலை வெளியீட்டு

எமது சமூகத்தின் மாற்றத்துக்கான விதையை முன்பள்ளி குழந்தைகளிடமே விதைக்கவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் எதற்கும் துணிந்த ஒருவர். எதற்கும் பயப்படாத ஒருவர். அதுதான் அவரது பலமும் பலவீனமுமாகும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலை அன்னாரது பூர்வீக இல்லத்தில் புதன்கிழமை (12.02.2025) ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ஆளுநர், எனது தந்தையார் நாகலிங்கம் அவர்கள் தந்தை செல்வா அவர்களுடனும், அமிர்தலிங்கம் அவர்களுடனும் இணைந்து பணியாற்றியிருக்கின்றார். அமிர்தலிங்கம் அவர்கள் நேர்மையானவர். மக்களால் இன்றும் மதிக்கப்படுவதற்கு அதுதான் காரணம். அவரது சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லை. அமிர்தலிங்கம் அவர்களதும் அவரது பாரியார் மங்கையர்கரசி அம்மையாரதும் பேச்சுக்களைக் கேட்டபதற்காக சிறுவயதில் கூட்டங்களுக்கு சென்றமை

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் எதற்கும் துணிந்த ஒருவர். எதற்கும் பயப்படாத ஒருவர். அதுதான் அவரது பலமும் பலவீனமுமாகும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார் Read More »