February 2025

‘அழகான கடற்கரையின் பங்குதாரர்களாவோம்’ என்னும் தொனிப்பொருளில் கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி கௌதாரிமுனை கடற்கரையில் இடம்பெற்றது.

எமது சுற்றுச்சூழலை சுத்தமாகப் பேணுவோம் என ஒவ்வொரு தனிநபரும் முடிவெடுத்து செயற்பட்டால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தூய்மையான இலங்கை என்பதன் இலக்கை அப்போதே முழுமையாக அடையமுடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் ஓர் அங்கமான, ‘அழகான கடற்கரையின் பங்குதாரர்களாவோம்’ என்னும் தொனிப்பொருளில் கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் கிளிநொச்சி மாவட்ட நிகழ்ச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கௌதாரிமுனை கடற்கரையில்  அன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இந்த […]

‘அழகான கடற்கரையின் பங்குதாரர்களாவோம்’ என்னும் தொனிப்பொருளில் கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி கௌதாரிமுனை கடற்கரையில் இடம்பெற்றது. Read More »

பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி எஸ்.அஞ்சனாதேவி விடுத்துள்ள ஊடக அறிக்கை

விவசாய இரசாயன வெற்றுப் போத்தல்கள் சேகரிக்கும் ஆரம்ப நிகழ்வும், வாகனப் பேரணியும் 24.02.2025 திங்கட்கிழமை  காலை 10 மணிக்கு திருநெல்வேலியிலுள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. Crop life நிறுவனம் மற்றும் விவசாய நிறுவனங்களின் அனுசரணையுடன் பிரதி விவசாய பணிப்பாளர் – யாழ்ப்பாணம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், பதிவாளர் – பீடைகொல்லி கட்டுபாட்டு

பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி எஸ்.அஞ்சனாதேவி விடுத்துள்ள ஊடக அறிக்கை Read More »

தினக்குரல் பத்திரிகை, யாழ் தினக்குரல் பத்திரிகை, நொதேர்ன் மருத்துவனை ஆகியனவற்றின் நிறுவுனரும் தொழிலதிபருமான சாமி என்று அழைக்கப்படும் செல்லையா பொன்னுசாமி அவர்களின் இழப்பையொட்டி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

தினக்குரல் பத்திரிகை, யாழ் தினக்குரல் பத்திரிகை, நொதேர்ன் மருத்துவனை ஆகியனவற்றின் நிறுவுனரும் தொழிலதிபருமான சாமி என்று அழைக்கப்படும் செல்லையா பொன்னுசாமி அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்புகள் எமது சமூகத்தில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளன. கொழும்பில் காலத்தின் தேவைகருதி அவர் ஆரம்பித்த தினக்குரல் பத்திரிகை சமாதான காலத்தில் யாழ்ப்பாண மண்ணிலிருந்தும் வெளிவரத் தொடங்கியது. பிராந்திய ஊடகங்களின் செல்வாக்கு மிகுந்த வடக்கு மண்ணிலிருந்து ஏற்கனவே வெளிவந்த பிராந்தியப் பத்திரிகைகளுக்கு மேலதிகமாக

தினக்குரல் பத்திரிகை, யாழ் தினக்குரல் பத்திரிகை, நொதேர்ன் மருத்துவனை ஆகியனவற்றின் நிறுவுனரும் தொழிலதிபருமான சாமி என்று அழைக்கப்படும் செல்லையா பொன்னுசாமி அவர்களின் இழப்பையொட்டி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி Read More »

மன்னார் மறை மாவட்டத்தின் நான்காவது ஆயரின் திருப்பொழிவுத் திருவழிபாடு

மன்னார் மறை மாவட்டத்தின் நான்காவது ஆயராக தெரிவு செய்யப்பட்ட பேரருள் தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் ஆயர் திருப்பொழிவுத் திருவழிபாடு இன்று சனிக்கிழமை காலை (22.02.2025) மடுத் திருத்தலத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பங்கேற்றார். மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு மற்றும் திருப்பலி என்பன இடம்பெற்றன. அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தொடர்பில் வெளியிடப்பட்ட நூலும், ஆளுநரிடம் இதன்போது

மன்னார் மறை மாவட்டத்தின் நான்காவது ஆயரின் திருப்பொழிவுத் திருவழிபாடு Read More »

வடக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரசபைகளின் நியமத்துணைவிதிகளின் சட்ட ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை மீறிச் செயற்படும் அழகக நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் -வடக்கு மாகாண ஆளுநர்

வடக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரசபைகளின் நியமத்துணைவிதிகளின் சட்ட ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை மீறிச் செயற்படும் அழகக நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண அழகக சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (21.02.2025) நடைபெற்றது. ஒரு சில அழகக நிலையங்கள் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்படுவது தொடர்பில் ஏற்கனவே ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதற்கு அமைவாக இன்றைய கூட்டம்

வடக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரசபைகளின் நியமத்துணைவிதிகளின் சட்ட ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை மீறிச் செயற்படும் அழகக நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் -வடக்கு மாகாண ஆளுநர் Read More »

தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் போன்று செயற்படக்கூடாது – வடக்கு மாகாண ஆளுநர்

தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் போன்று செயற்படக்கூடாது. தொழிற்சங்கங்களும் உரியவகையில் சேவையாற்றிக்கொண்டே அதை மேம்படுத்தும் வகையில் தங்களுக்கான தேவைப்பாடுகளை கோரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண தொழில்நுட்ப சேவையாளர் சங்கம் , வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம், வடக்கு மாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கம் என்பனவற்றின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் தனித்தனியே சந்தித்து இன்று வெள்ளிக்கிழமை காலை (21.02.2025) கலந்துரையாடினர். கொடுப்பனவுகளை அதிகரித்தல், இடமாற்றங்கள்

தொழிற்சங்கங்கள் அரசியல்கட்சிகள் போன்று செயற்படக்கூடாது – வடக்கு மாகாண ஆளுநர் Read More »

மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலர் பிரிவின் பல கிராமங்களுக்கு ஆளுநர் விஜயம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலர் பிரிவு மற்றும் மாந்தைமேற்கு பிரதேச செயலர் பிரிவின் பல கிராமங்களுக்கு புதன்கிழமை 19.02.2025 களப்பயணம் மேற்கொண்டு மக்களுடன் சந்திப்புக்களை நடத்தினார். இதன்போது மக்களால் பல்வேறு விடயங்கள் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அவை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும் ஆளுநரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார் மடு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இரணைஇலுப்பைக்குளம், கீரிசுட்டான், பாலம்பிட்டி ஆகிய கிராமங்களுக்கு மடு பிரதேச செயலர்

மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலர் பிரிவின் பல கிராமங்களுக்கு ஆளுநர் விஜயம் Read More »

மஹா சிவராத்திரிக்கு மறுநாள் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை – ஆளுநர்

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுநாள் வியாழக்கிழமை (27.02.2025) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவித்துள்ளார். அதற்குப் பதிலாக 01.03.2025 சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என்றும் ஆளுநர் தெரியப்படுத்தியுள்ளார்.

மஹா சிவராத்திரிக்கு மறுநாள் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை – ஆளுநர் Read More »

வடக்கு மாகாணத்தில் புனரமைக்கப்பட வேண்டிய வீதி விவரங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களால், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வடக்கு மாகாணத்தில் புனரமைக்கப்பட வேண்டிய வீதி விவரங்கள் கோரியமைக்கு அமைவாக 05.02.2025 அன்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், ஜனாதிபதி செயலகத்துக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரால் 09.02.2025 அன்று அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் 1,500 கிலோ மீற்றர் நீளமான கிராமிய வீதிகளைப் புனரமைப்பதற்கு

வடக்கு மாகாணத்தில் புனரமைக்கப்பட வேண்டிய வீதி விவரங்கள் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. Read More »

பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லப்பட்டால், சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு

பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லப்பட்டால், சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (20.02.2025) கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது ஆளுநர், பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்லும் பெற்றோர் உள்ளிட்ட எவரும் மாணவர்களுக்கு தலைக்கவசம் அணிவிக்காது ஏற்றிச் செல்வதாக முறையிடுகின்றனர். குறிப்பாக

பாடசாலை மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லப்பட்டால், சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு Read More »