August 2023

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள்-ஆளுநர் தலைமையில் ஆராய்வு

வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்து வீதிப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று 04.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது. ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாவட்ட செயலாளர்கள், வைத்திய அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், மாநகர சபை ஆணையாளர், வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சார்பாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் துறைசார் அதிகாரிகளின் […]

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள்-ஆளுநர் தலைமையில் ஆராய்வு Read More »

வடமாகாணத்தில் சேகரிக்கப்படும் பசுப்பால் ஏனைய மாகாணங்களுக்கு அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டு வடக்கிலேயே பால் சார் உற்பத்திகளை ஊக்குவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

வடமாகாணத்திலுள்ள மாவட்டங்களிலிருந்து நாளாந்தம் சேகரிக்கப்படும் 14,000 லீற்றர் பசுப்பால் ஏனைய மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுவரும் நிலையில், வடக்கில் பால் தொடர்பான உற்பத்திப்பொருட்களுக்கு பசுப்பாலை பயன்படுத்தும் வேலைத்திட்டத்தை வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது. வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் யாழ், இந்திய உயர்ஸ்தானிகர் திரு. சிறீ ராகேஷ் நட்ராஜ் உட்பட அரசாங்க அதிகாரிகள் மற்றும் வடக்கில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, கிராமியக்கைத்தொழில் தலைவர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும்,

வடமாகாணத்தில் சேகரிக்கப்படும் பசுப்பால் ஏனைய மாகாணங்களுக்கு அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டு வடக்கிலேயே பால் சார் உற்பத்திகளை ஊக்குவிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். Read More »

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8306 மெற்றிக் தொன் இலவச யூரியா உரம். இதன் விலை 4.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

வட மாகாணத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் குருநாகல், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் உள்ள 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8360 மெற்றிக் தொன் யூரியா இரசாயன உரத்தை இலவசமாக விநியோகிக்கும் வேலைத்திட்டம் 10.08.2023 அன்று சாவகச்சேரி கமநல சேவை நிலையத்தில் ஆரம்பமானது. வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிட்கி தலைமையில் தொடக்க விழா நடைபெற்றது. இந்த திட்டம் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பால்

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8306 மெற்றிக் தொன் இலவச யூரியா உரம். இதன் விலை 4.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள். Read More »

வடமாகாண ஆடிப்பிறப்பு விழா 2023

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண ஆடிப்பிறப்பு விழாவானது 2023.07.17 (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் வடமாகாண கல்வி அமைச்சின் சரஸ்வதி சிலை முன்றலில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாணப் பிரதம செயலாளர் திரு.சமன் பந்துலசேன அவர்களும், சிறப்பு விருந்தினராக செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் (தலைவர், சிவபூமி அறக்கட்டளை, தெல்லிப்பளை துர்க்கா

வடமாகாண ஆடிப்பிறப்பு விழா 2023 Read More »

வவுனியாவில் நடமாடும் சித்த மருத்துவ முகாம் இடம்பெற்றது

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து வவுனியா மாவட்டத்தில் ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 29.07.2023ந் திகதி 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை நடாத்தியிருந்தது. இந்நிகழ்வில் கௌரவ இந்தியத் துணைத்தூதுவர், வடமாகாண சுகாதார அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர், வடமாகாண சுதேச மருத்துவ ஆணையாளர், வடமாகாண சுதேச மருத்துவ பிரதி ஆணையாளர், வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பாளர், பாடசாலை அதிபர்

வவுனியாவில் நடமாடும் சித்த மருத்துவ முகாம் இடம்பெற்றது Read More »