வவுனியா மாவட்டத்தில் இவ் வருடம் சிறுபோகம் 2025 இல் Pளுனுபு நிகழ்ச்சித்திட்டத்தில் பாவற்குளம் பெரிய நீர்ப்பாசனக் குளத்தின் கீழ் 50 ஏக்கர் நிலப்பரப்பில் விதை நெல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கென 50 விவசாயிகள் தெரிவுசெய்யப்பட்டு பயனாளி ஒருவருக்கு ஒரு ஏக்கருக்கு 3 புசல் வீதம், மானிய அடிப்படையில் விதை நெல் வழங்கப்பட்டிருந்தது.
தற்போது பயிரானது 1 ½ மாத வளர்ச்சிப்பருவத்தை எட்டியுள்ள நிலையில் எதுவித நோய், பீடைத் தாக்கங்களற்றுக் காணப்படுகின்றது.
இதில் விவசாயி ஒருவர் முன்னோடியாக ½ ஏக்கர் நிலப்பரப்பில் நாற்றுநடுகை மேற்கொண்டு விதை நெல் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.