வடக்கு வட்டமேசை -‘கூட்டுறவு மற்றும் நுண்கடன் சம்பந்தமான சாதக பாதகங்கள்’

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் ‘வடக்கு வட்டமேசை’ (‘‘Northern_Province_Round_Table’’) கலந்துரையாடல் நாளை (22) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது.

கௌரவ ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கமைவாக வடமாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவஸ்தர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளும் முகமாக இடம்பெறும் இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் இம்முறை ‘கூட்டுறவு மற்றும் நுண்கடன் சம்பந்தமான சாதக பாதகங்கள்’ தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

நுண்கடன் தொடர்பில் கருத்துக்கள் தெரிவிக்க ஆர்வமுள்ளோர் குறித்த  கலந்துரையாடலில் கலந்துகொண்டு  தமது கருத்துக்களை தெரிவிக்கமுடியும்.  மாதம் இருமுறை நடைபெறும் இந்த ‘வடக்கு வட்ட மேசை’ கலந்துரையாடலில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளமுடியும்

–  வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு