வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் இன்று திங்கட் கிழமை (09.02.2026) நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் வைத்து இவருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. இன்று தொடக்கம் செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.