வடக்கின் தங்க குரல் தேடல் நிகழ்வு கௌரவ ஆளுநர் தலைமையில் ஆரம்பம்

வடக்கு இசை ஆர்வலர்களை ஊக்குவிக்கும் முகமாக வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலில் வட மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சுடன் ஆளுநர் செயலகம் இணைந்து நடாத்தும் வடக்கின் தங்க குரல் 2019 இற்கான முதற்கட்ட குரல் தேர்வு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் 05 ஒக்ரோபர் 2019 அன்று யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

இந்த குரல் தேடல் நிகழ்வில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் வடக்கின் தங்க குரல் தேடல் நிகழ்வில் 15 தொடக்கம் 30 வயதிற்கு இடைப்பட்ட இசையார்வலர்கள் பலர் கலந்துகொண்டதுடன் இக் குரல் தேடல் யாழ் பொதுநூலக கேட்போர்கூடம் மற்றும் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி ஆகிய இரு நிலையங்களில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு