யாழ் நாவாந்துறை மற்றும் ஐந்துசந்தி பகுதிகளுக்கு கௌரவ ஆளுநர் கண்காணிப்பு விஜயம்

யாழ்ப்பாணம் நாவாந்துறை மற்றும் ஐந்து சந்தி பகுதிகளுக்கு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் 29 ஏப்பிரல் 2019 அன்று முற்பகல் திடீர் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டார்.

இதன்போது நாவாந்துறை பொதுச்சந்தைக்கு விஜயம் செய்த கௌரவ ஆளுநர் அவர்கள் அங்குள்ள வியாபாரிகளுடனும் பிரதேச மக்களுடன் சுமூகமான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

அத்துடன் ஐந்து சந்தி பகுதிக்கும் விஜயம் செய்த ஆளுநர் அவர்கள் அப்பகுதி மக்களுடன் சுமூகமான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

மேலும் குறித்த பகுதிகளில் வாழும் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறும் ஆளுநர் அவர்கள் பிரதேச மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு
29.04.2019