மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் பயனாளிகளுக்கு உள்ளீடு வழங்கும் நிகழ்வு – 2025

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு 10.09.2025 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் திருமதி.சோ.விஜயதாசன் பிரதி விவசாயப் பணிப்பாளர் – கிளிநொச்சி தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.ச.முரளிதரன், அரசாங்க அதிபர் கிளிநொச்சி அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.ச.சிவஸ்ரீ, செயலாளர், விவசாய அமைச்சு(வ.மா) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் திரு.தெ.யோகேஸ்வரன், மேலதிக விவசாயப்பணிப்பாளர்(வ.மா), திரு.ச.பிரதீபன் , கணக்காளர், மாகாண விவசாய திணைக்களம்(வ.மா), பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர், பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர் மற்றும் விவசாயப் பெருமக்களும் கலந்து கொண்டனர்.

மேலும் விருந்தினர்கள் கருத்து தெரிவிக்கும் போது திட்டங்களினால் வழங்கப்படும் உள்ளீடுகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவதுடன் விவசாயிகள் ஆகிய நீங்கள் உங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன் விவசாய நடவடிக்கையில் இம் மாவட்டத்தினை முன்னேற்றுவதுடன் வடக்கு மாகாணத்தின் வளர்ச்சியிலும் பங்களிப்பு செலுத்தவேண்டும் எனவும் பயிர்ச்செய்கையை கைவிடாது தொடர்ந்தும் செயற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந் நிகழ்வானது நெற் செய்கையாளர்கள், மறுவயற்பயிர் செய்கையாளர்கள், வீட்டுத் தோட்ட செய்கையாளர்கள் மற்றும் பெறுமதி சேர் உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கு உள்ளீடுகள் வழங்கபட்டதுடன் நன்றியுரையுடன் இனிதே நிறைவு பெற்றது.