மகளிர் விவகார அமைச்சினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 22 ஜனவரி 2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ஏழு பயனாளிகளுக்கு குறித்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர், முல்லைத்தீவு மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தின் சமூகசேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.