புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர்வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் மற்றும்வடக்கு மாகாண அலுவலகங்களில் நிலவும்தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் வேலைமேற்பார்வையாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு கௌரவஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின்தலைமையில் 26 ஜனவரி 2019 அன்று  யாழ் வேம்படிபெண்கள் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.

இதனடிப்படையில் 249 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களும்  33 தொழில்நுட்டஉத்தியோகத்தர்களுக்கான நியமன கடிதங்களும் 10 வேலைமேற்பார்வையாளர்களுக்கான நியமனக் கடிதங்களும்  வழங்கி வைக்கப்பட்டது.

ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன்,  வடக்கு மாகாண பிரதம செயலாளர்ஏ.பத்திநாதன்,  மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மாகாணகல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட பெருமளவானோர் இந்த இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.