திட்டமிடல் பிரதிப் பிரதம செயலாளராக திருமதி ராஜினி ஜெயராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், வடக்கு மாகாண திட்டமிடல் பிரதிப் பிரதம செயலாளராக திருமதி ராஜினி ஜெயராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (07.10.2025) வழங்கி வைத்தார். ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.