‘சில்ப அபிமானி’ – மாகாண மட்ட கைப்பணிப் போட்டி – 2021 விருது வழங்கும் விழா

உள்ளூர் கைப்பணி கலைஞர்களை தேசிய ரீதியில் கௌரவப்படுத்தும் நோக்கில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களம் தேசிய அருங்கலைகள் பேரவையுடன் இணைந்து இவ்வாண்டு ஓக்ரோபர் மாதம் 23ம் திகதி யாழ் கனகரத்தினம் மத்திய மகா  வித்தியாலயத்தில் நடாத்திய மாகாண மட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் ‘சில்ப அபிமானி’ ஜனாதிபதி விருது கைப்பணிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களை கௌரவிக்கும் முகமாக விருது வழங்கும் விழா தொழிற்துறை திணைக்கள பணிப்பாளரின் தலைமையில் ஹோட்டல் திண்ணையில் இல் டிசம்பர் மாதம் 12ம் திகதி 2021 அன்று நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்ட செயலாளர், மகளிர் விவகார அமைச்சு, வட மாகாணம் அவர்களாலும் ஏனைய விருந்தினர்களாலும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குரிய சான்றிதழ்களும் பணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.