சர்வதேச மகளிர்தினம் – 2022 – வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம்

2022 ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர்தினமானது வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் 08/03/2022 செவ்வாய்கிழமை அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு விசுவமடு மத்திய சனசமூக நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மகளிரின் பல்வேறு படிநிலைகளுக்குரிய ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் சமூக மருத்துவ உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டன. அத்துடன் பாரம்பரிய வைத்தியர்கள் கௌரவிக்கப்பட்டு விருந்தினர்களுக்கு மூலிகைக் கன்றுகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர் , வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர், மேற்பார்வை சமூக மருத்துவ உத்தியோகத்தர், முல்லைத்தீவு மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், சமூக மருத்துவ உத்தியோகத்தர்கள், மகளிர் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.