வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் அ.அன்னராசா தலைமையிலான குழுவினர் இன்று திங்கட் கிழமை (18.08.2025) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பில் தவிசாளரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன் அது தொடர்பான மனுவும் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.