கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி மகளிர் விவகார அமைச்சினால் வழங்கி வைப்பு!

கிளிநொச்சியில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 19.01.2024 அன்று கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பதினொரு பயனாளிகளுக்கு குறித்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
குறித்த நிகழ்வில் பயனாளிகள் தமது வாழ்வாதாரத்துக்கான தொழில் முயற்சிகளை மிகவும் நம்பிக்கையுடன் தொடர்வதாகக் கூறி வடக்கு மாகாண சபைக்குத் தங்களது நன்றிகளையும் தெரிவித்திருந்தனர்.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் திரு.சு.ஜெயனந்தராசா அவர்களும் மாவட்ட சமூகசேவைகள் அலுவலகத்தின் உத்தியோகத்தர்களும் மற்றும் வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.