எமது சமுதாயத்தின் சில அத்திவாரங்கள் போரினால் தகர்க்கப்பட்டுள்ளன – ஆளுநர்

போர் எங்களை தாக்கியது மட்டுமல்லாது எமது சமுதாயத்தின் சில அத்திவாரங்கள் போரினால் தகர்க்கப்பட்டுள்ளன. எனவே அதனை நாம் செம்மைப்படுத்தவேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.

கைதடியில் அமைந்துள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் NVQ மட்டத்தினை பூர்த்தி செய்த 245 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஆளுநர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு