இராஜாங்க அமைச்சரின் விஜயமும் கைத்தறி கையளிப்பு நிகழ்வும்

தொழிற்துறை திணைக்களம் வட மாகாணத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வேப்பங்குளம் அம்பலாங்கொட மற்றும் வைரவப்புளியங்குளம் கைத்தறி நெசவு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களிற்கு பற்றிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ தயாசிறி ஜெயசேகர அவர்கள் 19 பெப்ரவரி 2022 அன்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இந் நிகழ்வின் போது மேற்படி அமைச்சின் ஒதுக்கீட்டின் கீழ் தயாரிக்கப்பட்ட புதிய நெசவு தறிகளினை (Hand loom) வேப்பங்குளம் கைத்தறி நெசவு நிலையம் மற்றும் அம்பலாங்கொட கைத்தறி நெசவு நிலையத்திற்கு கைளித்ததுடன் நெசவாளர்களுக்கு தேவையான நூல்களினையும் வழங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வின் போது அமைச்சரினால் மரக்கன்று ஒன்றும் ஒவ்வொரு நிலையத்திலும் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்திகளினை பார்வையிட்டதுடன் அவ் உற்பத்தியாளர்கனை சந்தித்து பாராட்டினை தெரிவித்ததுடன் அவர்களின் குறைகளினையும் கேட்டறிந்து எதிர்காலத்தில் அவர்களுக்கு தேவையான ஊக்குவிப்புகளை வழங்குவதாக தெரிவித்தார்.