இங்குபேட்டர் இயந்திரத்தின் ஆரம்ப நிகழ்வு

அச்சுவேலி கோழி பண்ணையில் 15,000 முட்டைகளை ஓரே நேரத்தில் பொரிக்கவைக்கும் இங்குபேட்டர் இயந்திரத்தின் ஆரம்ப நிகழ்வு 19 ஏப்பிரல் 2021 காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள் கலந்து கொண்டு இயந்திரத்தை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், வடமாகாண விவசாயப் பணிப்பாளர் மற்றும் விவசாயத்துறை சார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் இயந்திரம் மற்றும் அதன் செயன்முறைகள் என்பவை பற்றி கேட்டறிந்த கௌரவ ஆளுநர் அவர்கள், பண்ணையின் செயற்பாடுகளையும் பார்வையிட்டார். அத்துடன் பண்ணையின் வணிக உற்பத்திகளுக்கு தேவையான  உதவிகளையும் வழங்குவதாக உறுதி அளித்தார்.