அடையாள சின்னம் அணிவிக்கும் நிகழ்வு

யாழ் பிராந்திய பொது சுகாதார பரிசோதகர் பயிற்சி நிலையத்தில் பொது சுகாதார பரிசோதகர் பயிற்சியை நெறியை பூர்த்தி செய்து கொண்டிருக்கும் பயிலுநர்களிற்கான இலச்சினை அணிவிக்கும் வைபவம் கடந்த வியாழக்கிழமை 21.11.2023ம் திகதி அன்று மாகாண சுகாதார சேவைகள் பணிமனை, வடக்கு மாகாண மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. சி. திருவாகரன் அவர்கள் கலந்து கொண்டார். மற்றும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி அவர்களும் கௌரவ விருந்தினராக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் இந் நிகழ்வில் 34 பயிலுனர்கள் தங்கள் இலச்சினைகளைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.