வட மாகாண ஆளுநரின் சுதந்திரதினச் செய்தி

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் இலங்கையில் சுபீட்சம் மிக்க எதிர்காலம் தேசிய ஒருமைப்பாட்டுடன் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் முன்நகர ஆரம்பித்திருக்கிறது.

30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தின் பாதிப்புகள், இழப்புகளில் இருந்து, பேண்தகு அபிவிருத்தியை அடைவதற்காக, மற்ற மாகாணங்களில் இப்போது ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற அபிவிருத்திக்கு இணையான வரப்பிரசாதங்களை , வடக்கின் மக்கள் துரிதமாக பெற்றுக்கொள்வதற்கு அனைவரும் முழுமையாக தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும், நிலைபேறுடைய ஒரு அபிவிருத்திப் பயணத்தில் ஒருமைப்பாட்டுடன் அனைவரும் ஒன்றாக ஒன்றிணைந்து பயணிப்போம்.

பி. எஸ். எம். சார்ள்ஸ்,
ஆளுநர்,
வட மாகாணம்.