வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம்

வடக்கு மாகாண சபைக்கு இரண்டு புதிய செயலர்களுக்கான நியமனம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் 18.12.2024  அன்று புதன்கிழமை மதியம் ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக பொ.குகநாதன் அவர்களுக்கும், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலராக திருமதி ப.ஜெயராணி அவர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.