டான் தொலைக்காட்சி குழுமத்தால் ஆண்டுதோறும் யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக்கோபுரத்தை மின்விளக்குகளால் அலங்கரித்து, புத்தாண்டை வரவேற்கும் ஆரம்ப நிகழ்வில் இன்று திங்கட்கிழமை மாலை (23.12.2024) கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், மின்விளக்குகளை ஒளிரச் செய்து அதனை ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் அவர்களும் பங்கேற்றார்.