யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதலாவதாக பயணிக்கும் AL 9 102 பயணிகள் விமானத்தில் கௌரவ ஆளுநர்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னை நகரத்திற்கு முதலாவதாக பயணிக்கும் எயார் இந்தியா நிறுவனத்தின் AL 9 102 பயணிகள் விமானத்தில் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இன்று பயணமாகவுள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையில் புதிய உறவுகளையும் புதிய வர்த்தக தொடர்புகளையும் இந்த விமான நிலையத்தினூடாக உருவாக்கமுடியும் என்று எதிர்பார்ப்பதாக கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.