மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் நடைபெற்றது – 2019

வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்கான 2019ம் ஆண்டின் 2ம் காலாண்டுக்கான மாகாண திட்டமிடல் குழுக்கூட்டம் 18 யூலை 2019 ஆம் திகதி பிரதம செயலாளர், வடக்கு மாகாணம் திரு.அ.பத்திநாதன் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கௌரவ ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் வடக்கு மாகாண மாவட்ட செயலாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.