அபிவிருத்தி உத்தியோகத்தர் – பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

வடக்குமாகாணத்தில் காணப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் – பயிலுநர் (77), கலாசார உத்தியோகத்தர் (03), பட்டதாரி ஆசிரியர் தகவல் தொழிநுட்பவியல் பாடம் (09) ஆகிய ஆளணிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளிற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் வைபவம் 17 யூலை 2019 அன்று மன்னார் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தார்.