ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல் தொடர்பானபயிற்சிப்பட்டறை

வடமாகாண ஆளுநர் கலாநிதி. சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலின் கீழ் பிரதம செயலாளர், வடக்கு மாகாணம் அ.பத்திநாதன்அவர்களின்அவர்களின் வழிகாட்டலில் Stromme Foundation நிறுவனத்தின் அனுசரணையுடன் பிரதிப் பிரதம செயலாளர் ஆளணியும் பயிற்சியும் அலுவலகத்தினால் வடமாகாணத்தில் கடமையாற்றுகின்ற நிறைவேற்றுத்தர அதிகாரிகளுக்கு நடாத்தப்பட்ட “ஊழல் மற்றும் இலஞ்சத்தினை இல்லாதொழித்தல்” தொடர்பான பயிற்சிப்பட்டறையானது மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக 29.03.2019 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் 30.03.2019 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும் நடாத்தப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டசெயலக நிகழ்வானது அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களின் தலைமை உரையுடனும் . முல்லைத்தீவு மாவட்ட செயலக நிகழ்வானது அரசாங்க அதிபர் திருமதி.றூபாவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமை உரையுடனும் ஆரம்பமாகியது. பின்னர் இப்பயிற்சிப்பட்டறைக்குப் பொறுப்பான இணைப்பதிகாரியாக செயற்படுகின்ற வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணியும் பயிற்சியும்) திருமதி.ஸ்ரான்லி டி மெல் அவர்களினால் இப்பயிற்சிப்பட்டறையினுடைய நோக்கம் பற்றி குறிப்பிடப்பட்டதுடன் வளவாளர்களினையும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

வளவாளர்களாக  Stromme Foundation  நிறுவனத்திலிருந்து ரொனி செனிவிரத்ன அவர்களும் உதயங்க வர்ககொட அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். பங்குபற்றுநர்களாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற 38 நிறைவேற்றுத்தர அதிகாரிகளும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முல்லைத்ததீவு மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற 42 நிறைவேற்றுத்தர அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.