மறைந்த தென்மாகாண கௌரவ ஆளுநருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நேரில் சென்று இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்.

தென்மாகாண கௌரவ ஆளுநர் பந்துல ஹரிசந்திர அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரின் பூதவுடல் காலியில் அமைந்துள்ள மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (18.11.2025) அங்கு நேரில் சென்று இறுதி அஞ்சலியைச் செலுத்தினார்.