புதிய மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர், கௌரவ ஆளுநர் அவர்களை இன்று சந்தித்தார்

வடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பி.சமன் தர்மசிறி பத்திரன, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (24/04/2024) சந்தித்து கலந்துரையாடினார். தமது கடமைகளை இன்று பொறுப்பேற்ற புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆளுநர் செயலகத்திற்கு வருகைதந்து கௌரவ ஆளுநர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வரவேற்ற கௌரவ ஆளுநர், கடமைகளை சிறப்பாக மேற்கொள்ள வாழ்த்துக்களையும் கூறினார். அத்துடன் நோயாளர்களின் உரிமைகள் தொடர்பில் அதிக கரிசனை காட்டப்பட வேண்டும் என தெரிவித்த கௌரவ ஆளுநர், இந்த விடயம் தொடர்பில் சுகாதார துறையினர் அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் கூறினார். மேலும் மாகாணத்திலுள்ள ஆரம்ப சுகாதாரசேவை கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு, கௌரவ ஆளுநர் ஆலோசனைகளை  வழங்கினார்.