யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வட மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்கள் 06.02.2024 அன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சில் அமைச்சின் செயலாளர் திரு.பொ.வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த பதினேழு பயனாளிகளுக்கு குறித்த உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந் நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாண மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.