பரிகாரி இதழ் – II இறுவட்டு வெளியீடு

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் இரண்டாவது இதழ் பரிகாரி – II இறுவட்டானது கடந்த 14.08.2023 ந் திகதியன்று பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழாவின் போது வெளியிடப்பட்டது.

இதனை வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி. எஸ். மோகநாதன் அவர்கள் வெளியிட்டு வைத்ததுடன் வருகை தந்திருந்த அதிதிகள் சிலரிற்கும் இறுவட்டு வழங்கப்பட்டது.

மேலும் இவ் இதழானது வடக்கு மாகாண உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்வதினூடாக அனைவரும் பயன்பெற முடியும் என சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் அவர்களினால் அவரது உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர், பிரதி ஆணையாளர், பண்டத்தரிப்பு – சென்மேரிஸ் தேவாலயத்தின் பங்கு தந்தை பண்டத்தரிப்பு பொது சுகாதார பரிசோதகர், சண்டிலிப்பாய் உதவி பிரதேச செயலர், பண்டத்தரிப்பு பிரதேச சபை வட்டார உறுப்பினர் , பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலை மருத்துவப் பொறுப்பதிகாரி, உத்தியோகத்தர்கள், சுதேச மருத்துவ திணைக்கள வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், அயல் பாடசாலை அதிபர்கள் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர், மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்குபற்றி இந் நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.