வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் சந்தை ஊக்குவிப்பு நிகழ்வு நடைபெற்றது

வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூர் உற்சவ காலத்தில் மேற்படி சந்தை ஊக்குவிப்பு நிகழ்வு 24.08.2022 தொடக்கம் 26.08.2022 வரை நடைபெற்றது. இதில் சுமார் 75 காட்சியறைகள் தொழிற்துறை திணைக்களத்தால் நிறுவப்பட்டு சிறிய நடுத்தர முயற்சியாளர்களின் சந்தைப்படுத்தல் நடவடிக்கைக்காக வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் திருமதி. ரூபிணி வரதலிங்கம், செயலாளர், மகளீர் விவகார அமைச்சு வடமாகாணம், திருமதி. வனஜா செல்வரட்ணம், வடமாகாணப் பணிப்பாளர், தொழிற்துறை திணைக்களம் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்ததுடன் அனைத்து விற்பனைக் காட்சியறைக்கும் சென்று சிறிய நடுத்தர முயற்சியாளர்களை ஊக்கப்படுத்து முகமாக கலந்துரையாடினர்.

Best Miami Casinos in Florida - Updated 2023

மேலும் முதலாம் நாள் நிகழ்வில் (24.08.2022) மாலை வடமாகாண பிரதம செயலாளருடன் மாகாணப் பணிப்பாளர், தொழிற்துறை திணைக்களம், வட மாகாணம் அவர்களும் அனைத்து காட்சியறைக்கும் சென்று  கலந்துரையாடினர்.