வவுனியா பொது வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைபிரிவு மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சைப்பிரிவுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

வவுனியா பொது வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைபிரிவு மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சைப்பிரிவுக்கான அடிக்கல் நாட்டும் வைபவமானது 14 ஆகஸ்ட் 2019 அன்று நடைபெற்றது. இவ் இருதய நோய் சிகிச்சைபிரிவு மற்றும் சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவு ஆகியன நெதர்லாந்து அரசின் இலகு கடன் உதவியுடன் உருவாக்கப்படவுள்ளன.

சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். அத்தோடு இந்நிகழ்வில் நெதர்லாந்து துணைத்தூதுவர் திருமதி. ஈவா வான் வோசேம் அவர்கள், வடமாகாண ஆளுநர் கலாநிதி. சுரேன் ராகவன் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நெதர்லாந்து செயற்திட்ட பணிப்பாளர்கள், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய அதிகாரிகள், தாதியர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.