வடமாகாண சிறுவர் சார் நியதிச்சட்டங்கள் தொடர்பான மீளாய்வு கருத்தரங்கு

மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் சார் நியதிச்சட்டங்கள் தொடர்பான மீளாய்வு கருத்தரங்கானது LEADS நிறுவனத்தின் நிதி அனுசரனையுடன் TILKO விடுதியில் செப்ரெம்பர் 26, 27 திகதிகளில் நடைபெற்றது.

இக் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில், திருமதி சுஜீவா சிவதாஸ் ஆணையாளர் மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களம் அவர்களின் அழைப்பின் பெயரில் திரு.இ.இளங்கோவன் பிரதம செயலாளர் வடமாகாணம் அவர்களும் திரு.ஜே.எஸ்.அருள்ராஜ் செயலாளர் சுகாதார அமைச்சு வடமாகாணம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இக் கருத்தரங்கின் வளவாளராக திரு செல்வகுணபாலன் (மேலதிக சட்ட வரைஞர், நீதி அமைச்சு) அவர்கள் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினார்.

மேலும், வட மாகாணத்தில் நடைமுறையிலுள்ள சிறுவர் சார் நியதிச்சட்டங்களில் உள்ள நடைமுறை இடர்பாடுகள் தொடர்பாக கருத்தூன்றி மீளாய்வு செய்யப்பட்டது
இக் கருத்தரங்கில் சிரேஷ;ட நன்னடத்தை உத்தியோகத்தர்கள், நன்னடத்தை உத்தியோகத்தர்கள், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் முகாமையாளர்கள் மற்றும் மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.